கிளிநொச்சி இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்புக்குள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று அதிகாலை மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களும் கடற் தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பொறுப்பேற்கப்பட்ட 33 இந்திய மீனவர்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.