அமெரிக்க தூதுவராக ஜூலி சங் தொடர்வார்

0
340

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

டிசெம்பரில் ஜூலி சங் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இதுகுறித்து ஆராய்ந்த போது அது வதந்தி என தெரியவந்துள்ளது.

அத்துடன், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவிக்கையில், ஜூலி சங்கை திரும்ப அழைக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எந்த முடிவும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் 2022இல் ஜூலி சங் இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.