அம்பாறையில் காட்டு யானைகளின்
தொல்லை அதிகரித்துள்ளதாக கவலை

0
178

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சம்மாந்துறை நாவிதன்வெளி கல்முனை சாய்ந்தமருது காரைதீவு நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கல்முனை சாய்ந்தமருது காரைதீவு நிந்தவூர் நாவிதன்வெளி நற்பிட்டிமுனை அஸ்ரப் நகர் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் மீண்டும் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றது.

மாலை மற்றும் இரவு வேளைகளில் கிராமங்களுக்குள் உட்புகும் யானைகளினால் குடியிருப்பு பகுதி மற்றும் சிறுபோக நெற்செய்கை நிலங்கள் பெருமளவான பயன்தரும் மரங்களையும் பயிர்களையும் அழித்து வருவதாக கிராம மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதிகளில் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த யானை வெடிகள் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் அவை போதுமானவையாக இல்லை என்பதுடன் யானைகளைக் கட்டுப்படுத்துவதுக்கு மாற்று வழியை ஏற்படுத்தித்தருமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.