அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோளாவில் 02 பிரதேசத்தில், நேற்றிரவு வீடொன்று முற்றாக எரிந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
39 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே தீயில் கருகி சடலமாக மீட்கப்;பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற வீடானது, ஒரு பகுதி முற்றாக கல் வீடாகவும் மறுபகுதி கூரைப்பகுதியாகவும் காணப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்றபோது மனைவி, பிள்ளைகள் அனைவரும் உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிசார் விசாரணையினை ஆரம்பித்துள்ளதுடன்
மேலதிக விசாரணைகளுக்காக உயர் அதிகாரிகளுக்கும் விசேட தடயவியல் பொலிசாருக்கும் அறிவித்துள்ளனர்.