அம்பாறை கல்முனையில்அளவை இயந்திரங்களுக்கு முத்திரையிடும் பணி

0
74

அம்பாறை கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, வியாபாரிகளது அளவை உபகரணங்களுக்கு முத்திரையிடும் பணிகள், கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுதினமும் அளவை இயந்திரங்களுக்கு காலை 9.30 மணி முதல் 3.30 மணி வரை முத்திரையிட்டுக்கொள்ள முடியும். இலத்திரனியல் தராசுகள் மற்றும் பாரம்பரிய தராசுகளும் சரிபார்க்கப்பட்டு, முத்திரையிடப்படுகின்றன.
முத்திரையிடப்படாத அளவை இயந்திரங்களைப் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.