அம்பாறை கல்முனையில் இரு பாடசாலைகளுக்கு
காணிப் பத்திரங்கள் கையளிப்பு

0
176

அம்பாறை மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் பெண்கள் பிரிவு மற்றும் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளுக்குமான
காணிப் பத்திரங்கள் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலியினால் உத்தியோகபூர்வமான முறையில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்
எம். எஸ்.ச{ஹதுல் நஜீமிடம் கையளிக்கப்பட்டது.
காணிப் பத்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக காணிப்பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எச்.எல்.எம் மபாஸ் மற்றும்
காணி பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம் ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.