அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளுக்கு பெயர்ப் பலகைகளை நிறுவும் வேலைத்திட்டம், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி
தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி, பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் ஆகியோரும் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றனர்.
கல்முனை மாநகர சபையின் கீழுள்ள 150 வீதிகளுள் கல்முனை- மட்டக்களப்பு மற்றும் கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதிகளில் இருந்து ஆரம்பிக்கும் 40 வீதிகளுக்கு
முதற்கட்டமாக பெயர்ப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.