அம்பாறை கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு

0
165

அம்பாறை கல்முனை ஆதார வைத்திய சாலைக்கு கனடிய தமிழர் பேரவையினால் ஒரு கோடி ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கனடிய தமிழர் பேரவையின் மனிதநேய உதவித் திட்டங்களுக்கான இணைப்பாளர்
துரைரெத்தினம் இராசலச்சுமி துசியந்தன் கலந்து கொண்டார்.
கனடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கனடியத் தமிழர் நிதி சேர் நடை மூலம் திரட்டப்பட்ட நிதியின் மூலமே இவ் மருந்து பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு
வழங்கப்பட்டு வருகிறது.
அரச வைத்தியசாலைகளில் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு புலம்பெயர் கனடிய வாழ் தமிழ் மக்கள் தாயகத்தில் உள்ள
உறவுகளின் மேம்பாட்டிற்கு பல்வேறு வகைகளில் உதவிகளை வழங்கி வருகின்றனர்.