அம்பாறை கல்முனை பிரதேச செயலக ஏற்பாட்டில் நடமாடும் சேவை

0
132

அம்பாறை கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்கள் நடமாடும் சேவை இன்று பிரதேச செயலக வளாகத்தில்
பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இடம்பெற்றது.
நடமாடும் சேவையில் காணி, சமூக சேவைகள் ,சமுர்த்தி, மோட்டார் போக்குவரத்து, திட்டமிடல் ,கலாசாரம், மகளிர் அபிவிருத்தி, தேசிய அடையாள அட்டை, பொலிஸ் ,தேசிய வீடமைப்பு அதிகார சபை, பதிவாளர் திணக்களம் ஆகிய பிரிவுகள் தமது சேவைகளை வழங்கின.
முதியோர் அட்டைகளும் சிலருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் அங்கவீனமுற்ற நபர் ஒருவருக்கு சக்கர நாட்காலியும், இயலாமை நிலையிலுள்ள முதியோர்களுக்கு ஊன்றுகோலும்
மருதமுனை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை வழங்குவதற்கான நேர்மூகப் பரீட்சை என்பனவும் நடைபெற்றன.
கல்முனை பிரதேசத்திலுள்ள பொது மக்கள் பலரும் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு தங்களது தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சினைகளை
முன்வைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொண்டனர்.
நடமாடும் சேவையில் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.