பயணத்தடை அமுல்படுத்தபட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் உள்ள காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வழமை போன்று மக்கள் பயணங்களில் ஈடுபட்டதை காணமுடிந்தது.


அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள இப்பகுதியில் உள்ள கடற்கரை பகுதி, உள்வீதி ஏனைய பகுதிகளில் உள்ள உள்ளக வீதிகளில் கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறி மக்கள் தமது வாகனங்களில் வழமை போன்று நடமாடியிருந்தனர்.








