அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

0
176

நாட்டில் டெங்கு நோய்த் தாக்கம் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக, அம்பாறை காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட
மாவடிப்பள்ளி கிராமத்தின் பிரதான வீதியோரங்கள் துப்பரவு செய்யப்பட்டன.
காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனின் வழிகாட்டலில், காரைதீவு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களினால் துப்புரவுப் பணிகள்
முன்னெடுக்கப்பட்டன.
காரைதீவு சுகாதார வைத்தியகாரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர் உட்பட, சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள்
எனப் பலரும் துப்பரவுப் பணியில் கலந்து கொண்டனர்.