அம்பாறை சம்மாந்துறையில் இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் கலை கலாசார நிகழ்வு

0
191

அம்பாறை சம்மாந்துறையில் முஸ்லிம் எய்ட் செயற்திட்டத்தின் கீழ் ‘ஒரு மாற்றத்தை நோக்கி’ குழுவின் ஏற்பாட்டில் தமிழ், முஸ்லிம் இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் கலை கலாசார நிகழ்வுகளும், சித்திரைப் புத்தாண்டு விளையாட்டும் இடம்பெற்றது.
பிரதம விருந்தினர்களாக பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா,கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் இளங்கோவன், பள்ளிவாசல் நிர்வாக சபையினர், விளையாட்டு உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்காக ‘ஒரு மாற்றத்தை நோக்கி’ குழுவினர் ஒழுங்கு செய்திருந்த காட்சிப் பலகையில் நிகழ்விற்கு வருகை தந்த பிரதம விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்தiயும் குறிப்பிடத்தக்கது.