அம்பாறை சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாதசாரிகளுக்கு பல்வேறு வழிகளிலும் இடையூறை ஏற்படுத்தி வருகின்ற
வீதியோர அங்காடிகளை அகற்றும் பணிகளை சம்மாந்துறை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது.
சம்மாந்துறை பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைவாக சம்மாந்துறை நகரத்திலிருந்து அம்பாறை வீதி, மல்கம்பிட்டி வீதி, பொலீஸ் வீதி மற்றும் கல்முனை வீதிகளின்
இரு மருங்குகளிலும் தற்காலிக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களினால் பாதசாரிகள் மற்றும் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகனங்களுக்கும் பெரும்
அசௌகரியங்கள் ஏற்படுவதுடன் வீதி விபத்துகளும் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான ஆபத்துக்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே முஹம்மட் தலைமையில்
கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலீஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்கம் உள்ளிட்ட
குழுவினரால் இனங்காணப்பட்ட தற்காலிக அங்காடி வியாபாரிகளை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.