வெள்ள அனர்த்த அபாய நிலைமையை கருத்தில் கொண்டு, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியன ஒருங்கிணைந்து சாய்ந்தமருது தோணாவை சுத்திகரிப்பு செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
2019 ஆண்டிற்கு பின்னர் 3 வருடங்களாக எவ்வித புனரமைப்பும் இன்றி குறித்த தோணா காணப்பட்டதுடன், வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு ஏதுவாகவும் காணப்பட்டது.
பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய இந்தச் சுத்திகரிப்புப் பணிகள் இடம்பெறுகின்றன.