அம்பாறை சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலயத்தில் ஒளி விழா

0
149

அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேஷ மகா வித்தியாலயத்தில் யேசுபாலனின் பிறப்பை கொண்டாடும்
ஒளி விழா அதிபர் பி.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கல்முனை தமிழ் கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து
கலந்து கொண்டார்.
ஆன்மிக அதிதிகளாக கல்முனை ஏ.ஓ.ஜி. தேவாலய அருட் தந்தை கலிஸ்டஸ் ஹோமேஸ், பெரிய நீலாவனை ஆந்திரேயா ஆலய அருட் தந்தை எஸ்.புவியரசன்
உட்பட கல்முனை வலய கல்வி பணிமனையின் கிறிஸ்தவ மத கல்விப் பணிப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களினால் யேசுபாலன் பிறப்பு மற்றும் நத்தார் கரோல் கீதங்கள், நடன ஆற்றுகைகள் என்பன சிறப்பாக ஆற்றுகை செய்யப்பட்டன.