அம்பாறை சேனைக்குடியிருப்பு கணேசா பாலர் பாடசாலையில் தரம் ஒன்றுக்கு செல்லும் மாணவர்களை பாராட்டி வழியனுப்பி வைக்கும் மாணவர் விடுகை
விழா இன்றைய தினம் பாலர் பாடசாலை அதிபர் திருமதி கோவிந்தசாமி தலைமையில்
நடைபெற்றது.
நிகழ்வில் விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.கிலசன், சேனைக்குடியிருப்பு கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.சுந்தரராஜன்
பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ஆயிஷா பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி திருப்பதி,
பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பீ.ஹனா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
பாலர் பாடசாலை மாணவர்களின் நடனங்கள், பாடல் என பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்ததுடன் அவர்களுக்கான
பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன
மாணவர்களும் பிள்ளைகளின் பெற்றோரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.