அம்பாறை திருக்கோவிலில், முன்பள்ளி மாணவர்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்கும் முயற்சி

0
233

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிப் பாடசாலை மாணவர்களுக்கு யூனிசெப் நிறுவனத்தின் ஊடாக போசாக்கு
வேலைத்திட்டம் ஆரம்பிப்பட்டுள்ளது.
இவ் போசாக்கு வேலைத்திட்டமானது யூனிசெப் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன், திருக்கோவில் பிரதேச செயலக, முன்பள்ளிப் பருவ பிரிவினால் திருக்கோவில் பிரதேசத்தில்
தெரிவு செய்யப்பட்ட ஆறு முன்பள்ளிப் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், உதவித் திட்டப் பணிப்பாளர் அனோஜா உஷாந், முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட
முன்பள்ளிப் பாடசாலைகளுக்குச் சென்று போசாக்கு நிகழ்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்துடன் நிகழ்ச்சி திட்ட முன்னேற்றம் தொடர்பாகவும் ஆராய்ந்;தனர்.