அம்பாறை திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் பொது நூலகத்தில், வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு
பல்வேறு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
நிகழ்வானது திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஜெயந்தி வீரபத்திரன் தலைமையில் இடம்பெற்றது.
‘உலகம் வாசிப்போருக்கே சொந்தமானது’ எனும் தொனிப்பொருளில் நிகழ்வு இடம்பெற்றது.
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன், சிறந்த வாசகர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் உள்ளூராட்சி சபையின் உதவி ஆணையாளர் கமால் நித்மினி, திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் சதிசேகரன், திருக்கோவில் பிரதேச கல்விப் பணிப்பாளர் ரவீந்திரன், பிரதேச சபைகளின் செயலாளர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.