அம்பாறை திருக்கோவிலில் மஹா சிவராத்திரி வழிபாடுகள் மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக, திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தின் ஒழுங்கமைப்பில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
திருக்கோவில் கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி கே.ரவீந்திரன் தலைமையில், நிகழ்வு இடம்பெற்றது.
விநாயகபுரம் சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு, சிவஸ்ரீ ஆறுமுக கிருபாகர சர்மாவினால் பூஜை வழிபாடுகள்
நடாத்தப்பட்டதுடன், சிவராத்திரி விரதம் தொடர்பான சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது.
நிகழ்வில் கலாசார மத்திய நிலைய உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.