அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மகளிர் தின நிகழ்வு

0
159

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நாடும் தேசமும் உலகமும் அவளே எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மகளிர் தின பேரணியும் கலை நிகழ்வுகளும் திருக்கோவில் பிரதேசத்தில் குடிநிலம் கிராமத்தில் இடம்பெற்று இருந்தன.

இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர்ப் பிரிவின் ஏற்பாட்டில் தீலிபன் கலைவதனியின் தலைமையில் சாகாமம் குடிநிலம் கிராமத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.

அந்தவகையில் நாடும் தேசமும் உலகமும் அவளே எனும் தொனிப் பொருளில் இம்முறை சர்வதேச மகளிர் தின நிழ்வுகளும் பெண்களின் தனித்துவம் தொடர்பான வழிப்புணர்வு பேரணியும் இடம்பெற்று இருந்தன.

இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் பெண்கள் தொடர்பான சிறப்புரைகளும் இடம்பெற்று இருந்ததுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் கலந்து கொண்டு இருந்ததுடன்

நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருக்கோவில் பிரதேசசபை இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் பிரதேச செயலக சிறுவர் மகளிர்ப் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.