அம்பாறை நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், சித்திரைபுத்தாண்டினை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது நடைபெற்று முடிந்த பொதுப் பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்கள் நினைவுச் சின்னம்வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் நற்பிட்டிமுனை கணேஷ்வராலய பிரதம குரு சிவஸ்ரீ. எஸ்.சுதர்சன் குருக்கள்,கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி ரம்சின் பக்கிர், பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படை அதிகாரி ரட்நாயக்க, உட்பட பலர் கலந்து கொண்டனர்.