அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் அடிக்கடி இடம்பெறும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கான விழிப்புணர்வூட்டும் செயற்பாடு இன்று
அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது
நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவரும் சமூக ஆர்வலருமான ஐ.எம். நிஸ்மி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிந்தவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து
பிரிவு பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பி.ரி.நஸீர், பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது உட்பட பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிகள், முறையான சாரதி பயிற்சிகள், வீதி சமிக்ஞைகளை அனுசரித்தல், இலகு வழியில் சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான
வழிகாட்டல் என்பன வழங்கப்பட்டன.