அம்பாறை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 941 ஆக உயர்வு

0
403

அம்பாறை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளதுடன் கல்முனை பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது.

வீதியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மோட்டார் சைக்கிளில் உள்ளிட்ட வாகனங்களில் பயணித்தோர்கள் அக்கரைப்பற்று பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு எழுமாற்றாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது அடையாள அட்டைக இலத்திற்கு மாறாக வெளியில் சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்வடைந்துள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் 23 ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனின் ஆலோசனையின் பிரகாரம் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள்,பொலிசார் உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்பில் இப்பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

எவ்வாறாயினும், பொதுமக்கள் பொறுப்புடனும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் சுகாதாரத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.