அம்பாறை மாவட்டத்தில் இம் முறை 89400 கெக்டெயர் நிலப்பரப்பில் 223500 ஏக்கர் மாத்திரமே நெற்பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டபோதும் மாரி காலபோக செய்கை அம்பாறை மாவட்டத்தில் முற்றாகப் பாதிப்டைந்துள்ளன.
கடலில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக தொடர் மழையினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு ள்ளன இம் முறை அம்பாறை மாவட்டத்தில் 430000 மெற்றிக் தொன் விளைச்சள் எதிர்பார்க்கப்பட்டபோதும் அடை மழை காரணமாக முற்றாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் வடிந்தோடுவதால் பயிரிடப்பட்ட நிலங்கள் அழிந்துதான் காணப்படுகின்றன.
ஒரு சில மேட்டு நில இடங்களில் வெள்ளத்தின் தாக்கம் குறைவடைந்திருந்தாலும் தாழ் நிலப்பயிர்ச் செய்கையே அதிக நிலங்களைக் கொண்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.