அம்பாறை விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் ஆண்டு விழா

0
181

அம்பாறை விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகம், கழகத்தின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்டப் போட்டிகளை
நடாத்தியது.
மின்னொளியில் நடாத்தப்பட்ட இச் சுற்றுத் தொடர்களில், உதைபந்தாட்டப் போட்டியில் திருக்கோவில் குட்நிக் அணியும், கிரிக்கெட் போட்டியில் பொத்துவில் பிறி லயன்ஸ் அணியும்
சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டன.
விநாயகபுரம் மின்னாளி விளையாட்டு மைதானத்தில் கழகத்தின்; தலைவர் அ.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில்,
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.