அம்பாறை மாவட்டம் காரைதீவில் ‘நேர்மறையாக சிந்திக்கும் இளைஞர்கள்’ எனும் தலைப்பில் இளைஞர்களுக்கான செயலமர்வு முன்னெடுப்பட்டது.
ஸ்ரீலங்கா ஐ.ஆர்.ஓ. அறிவுசார் உறுதியளிக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் காரைதீவு தனியார் மண்டபத்தில் ஒரு நாள் செயலமர்வு நடைபெற்றது.
ஸ்ரீலங்கா ஐ.ஆர்.ஓ. அறிவுசார் உறுதியளிக்கும் அமைப்பின் நிறைவேற்று தலைவர் எ.றொஸான் முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில் அதிகளவான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
சமூக மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஐ.எஸ்.டி நிறைவேற்று பணிப்பாளர் பி.முத்துலிங்கம் வழிகாட்டலில் அவ் அமைப்பின் நிதி பங்களிப்புடன் இடம்பெற்ற செயலமர்வில் ஸ்பீட் அமைப்பின் ஐ.எஸ்.டி நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எம்.ஐ.றியால், ஐ.எஸ்.டி அமைப்பின் பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல், ஸ்ரீலங்கா ஐ.ஆர்.ஓ. அறிவுசார் உறுதியளிக்கும் அமைப்பின் நிறைவேற்று உறுப்பினர் எ.எம்.ஸாக்கீர் அஹம்மட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒருநாள் பயிற்சி பட்டறையின் வளவாளராக உளவியல் ஆலோசகர் மனுஸ் அபூபக்கர் கலந்து கொண்டு
இளைஞர்களின் நேர்மறையான சிந்தனைகள், எதிர்மறை சிந்தனைக்கும் நேர்மறையான சிந்தனைக்கும் இடையிலான வேறுபாடுகள் நேர்மறையான சிந்தனைகளால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தார்.