அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிப்பு!

0
93

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 4 மாதங்களுக்கு முன்னர் இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என வெரிட்டே றிசேர்ச் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 7 வீதமாக இருந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இந்த மாதத்தில் 24 வீதமாக உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் பொருளாதாரம்- பொருளாதார போக்கு தொடர்பில் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை உணர்கின்றனர் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.