அரசின் பொறுப்பற்ற செயலால் கொரோனா தாக்கம் தீவிரம் – நளிந்த ஜயதிஸ்ஸ

0
260


கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்திய பாதுகாப்பு அம்சங்களுக்குப் புறம்பாக அரசாங்கம் செயல்பட்டு தேவையற்ற விடயங்களுக்கு விளம்பரம் வழங்கியதால் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்  பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதல் சுற்றின் போது சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்திய பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மக்கள் முறையாகப் பின்பற்றினார்கள். இதனால் வைரஸ்  பரவல் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டது.
வைரஸ் தாக்கத்தின் அரசாங்கத்துக்கு சுற்று குறுகிய காலத்துக்குள் தீவிரமடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் சுற்றின் மூலப்பரவல் தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் உறுதியாக அறிவிக்கவில்லை. ஆனால் உக்ரைன் நாட்டுப் பிரஜை ஊடாகவே  கொரோனா வைரஸ் பரவியது என அனுமானிக்கப்படுகிறது.

அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயல்படுகிறது. ஆகவே நாட்டு மக்கள் தங்களின் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்- என்றார்.