அரச சேவையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலகுவான ஆடைத்திட்ட சுற்றறிக்கை இரத்துச் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் அரச சேவைகளின் நலன் கருதி, இலகு ஆடைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் இந்த சுற்றறிக்கையின்படி, பாடசாலை ஆசிரியைகள் இலகு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகைத் தந்ததை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாரி, நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதன்போது அவர், ஆசிரியைகளுக்கு சீருடைகளுக்கான கொடுப்பனகளை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்றும் யோசனை ஒன்றை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, சமூக ஊடகங்களில் ஆசிரியர்களின் இலகு ஆடைகள் தொடர்பில் பகிரப்பட்ட கருத்து தொடர்பில், குற்றப்புலனாய்வுத் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்போவதாக குறிப்பிட்டார்.
எனினும் ஆசிரியர் சீருடைகளுக்கான கொடுப்பனவுகளை இந்த தருணத்தில் முன்னெடுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
இதற்கான மாற்று திட்டம் தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாகவும் அதனை விரைவில் நாடாளுமன்றில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம் 2019 ஆம் ஆண்டு ஆடைகள் தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக அமைச்சர் என்ற வகையில் பிரதமர் இரத்துச்செய்வார் என்றும் கல்வி அமைச்சர் அறிவித்தார்
Home முக்கிய செய்திகள் அரச சேவையாளர்களுக்கான இலகு ஆடைத்திட்ட சுற்றறிக்கை குறித்து முக்கிய அறிவிப்பு!