அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினரால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்தக் கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய பதாதைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். சுமார் 1 மணி நேரம் இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.