இந்துசமயகலாசாரஅலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொத்துவில் இலாகுகலபிரதேசசெயலகங்கள் இணைந்துநடாத்திய
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கும், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் பொத்துவில் பிரதேசசெயலகத்தில் நடைபெற்றது.
பொத்துவில் பிரதேசசெயலககணக்காளர் ஜனாப் அப்துல் ரகுமான்
தலைமையில் இடம்பெற்றநிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருவே.ஜெகதீஸன் கலந்துகொண்டதுடன் லாகுகல பிரதேசசெயலாளர் திருந.நவநீதராஜா,நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப் எம்.எஸ்.எம் சுபைர் மற்றும் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.பிரதாப் நாவிதன்வெளி பிரதேச இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் க.நீலேந்திரன்
உள்ளிட்டோர்; கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் திணைக்களத்தின் செயற்பாடுகள்,அறநெறிப்பாடசாலைகளின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பான நடவடிக்கைகள்,புதிய பாடத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் என்பன இடம்பெற்றதுடன் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடையும் வழங்கப்பட்டது.
இதில் ,பொத்துவில்,லாகுகல அறநெறிப் பாடசாலைஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை திணைக்களத்தின் சார்பில் மாவட்ட இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருகு.ஜெயராஜி மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.