26.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அறுவடை நெருங்கும் நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய நெற் பயிர்கள்- அம்பாறை விவசாயிகள் கவலை

அம்பாறை மாவட்டத்தில், அறுவடைக்குத் தயாராகவிருந்த நெற் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், உரிய நிவாரணங்களை
வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சாகாமம் பிரதான வீதியின் நீத்தை ஆற்றின் அருகில் மதகு மீதாக வெள்ளம் பாய்ந்துவரும் நிலையில் போக்குவரத்தும்
தடைப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 151 குடும்பங்களை சேர்ந்த 21 ஆயிரத்து 507 பேர் பாதுகாப்பான இடங்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles