அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

0
272

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரகஸ் சந்தி பகுதியிலுள்ள வீஓயாவுக்கு அருகில் அழுகிய நிலையிலிருந்த சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை குறித்த பகுதியில் நடந்துச் சென்ற நபர் ஒருவர், சடலமொன்று கிடப்பதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்துள்ளதுடன், சடலம் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.