28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!

ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கின்றது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான, இடர்ப்பாடான காலங்களில் கடமையுணர்வோடும், அர்ப்பணிப்போடும் ஏதோ ஒரு வழிமுறைக்கூடாக எம்மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் அத்தனை ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும். 
 

அரசினால் எந்தவித வழிகாட்டுதல்களும் இல்லாமல், வளங்கள் எதுவுமே வழங்கப்படாத நிலையில் தமது சொந்தத் திறமைகளையும், மூளை வளத்தையும், மூலதனத்தையும் பயன்படுத்தி ஒலி, ஒளி, எழுத்து வடிவங்களிலும், இணையவழிமூலமான தொடர்பாடல், பண்பியல் வடிவங்களிலும் ஆசிரியர்கள் கல்வியை புகட்டுவது பாராட்டுக்குரியது. 
 

ஆசிரிய தொழில் மகிமை பொருத்திய மகத்தான தொழில் என்பதற்கு அதன் அறுவடையே சான்றாகும். அதனைச் சீரிய முறையில் தமது இன்பதுன்பங்களை மறந்து பணியாற்றும் ஆசிரியர்கள் சான்றோர்களே. 
இதைவிட ஆசிரியர்களை அளவுக்கு அதிகமாக பணியாற்ற சிலர் வற்புறுத்துவதாகவும், திணைக்களத்தால் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக வழங்கப்படும் பணத்தை வழங்க மறுப்பதாகவும் அறியப்படுகின்றது. 
 தயவு செய்து காலச்சூழலை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும். வற்புறுத்தல்கள், அதிகார துஸ்பிரயோகம் செய்தல் இக்காலத்திற்கு பொருத்தமானது அல்ல. 
 தமது நேரகாலத்தையும் பணத்தையும் விரயம் செய்து பணியாற்றுவோருக்கு மதிப்பளிப்பதோடு வாய்ப்பில்லாத மாணவர்களுக்கான வழிமுறைகளையும் தேடிக்கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.என தெருவித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles