தங்களுக்கு புரியாத மொழிகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைத்து, நுண்கடன்களில் சிக்க வைத்துள்ளதாக பழங்குடியின தலைவர் உருவரிகே வன்னியாலாத்தான் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார்.நுண்நிதிக் கடன்களைப் பெறுவதற்கான பெரும்பாலான ஒப்பந்தங்கள் ஆங்கிலத்தில் இருப்பதாகவும், ஆதிவாசிகள் பலருக்கு ஆங்கிலம் மட்டுமல்ல சிங்களம் அல்லது தமிழ் கூட படிக்கத் தெரியாது என்றும் பழங்குடியினத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது இனத்தை சேர்ந்த பல அப்பாவி ஏழை மக்கள் இந்த நுண்கடன் கடன் வலையில் சிக்கியு ள்ளதாக பழங்குடியின தலைவர் கூறியுள்ளார்.இலங்கை மத்திய வங்கியினால் உருவாக்கப்பட்ட உத்தேச கடன் ஒழுங்குமுறை சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அதனை அமுல்படுத்தக்கூடிய சட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பழங்குடியின தலைவர் கேட்டுக்கொள்கிறார்.உரிமம் பெற்ற நிகர நிதி நிறுவனங்களாக பதிவு செய்யப்படாத நிறுவனங்களை அல்லது நிறுவனச் சட்டம் போன்ற வேறு எந்தச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படாத நிறுவனங்களை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அவசரத் திட்டத்தை அமைக்குமாறும் பழங்குடித் தலைவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பான கடிதத்தின் பிரதிகள் மத்திய வங்கியின் ஆளுனர் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.