ஆபத்து இல்லை; அவதானம் தேவை! – சுகாதாரப் பிரிவு வலியுறுத்து

0
158

“இலங்கையில் மீண்டும் ஒரு கொரோனாத் தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை.”

-இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இருப்பினும், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றி கொரோனாத் தொற்று அலை ஏற்படாது பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் கூறினார்.