ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய
பேரவையின் ஏற்பாட்டில் பட்டிமன்றம் பட்டிமன்றம்

0
259

ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் சிறப்புபட்டிமன்றம் இன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில்இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவையின் தலைவரும் மட்டக்களப்பு உளவியல் ஆலோசனை மையத்தின் உளவள ஆலோசகருமான க.கிருஸ்ணமூர்த்தித லைமையில் இடம் பெற்றபட்டிமன்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் வி.பபாகரன் கலந்துகொண்டதுடன் அருளாளராக உகந்தைமலை முருகன் ஆலய உதவிக்குரு சிவஸ்ரீ ஆ.கோபிநாத் சர்மா மற்றும் சிறப்பு விருந்தினராக அம்பாரை மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் பேரவைதலைவர் தேசபந்து ஜலீல்ஜீ கலந்துகொண்டார்.

சமூகத்தை சீர்படுத்துவது அன்றைய கலாசாரமா? இன்றையகலாசாரமா? எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற பட்டிமன்ற மன்றத்தின் நடுவராக இந்து இளைஞர் மன்றம் மற்றும் சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்ல தலைவருமான த.கயிலாயபிள்ளை கடமையாற்றினார்.

பட்டிமன்றத்தில் அன்றைய கலாசாரமே சமூகத்தை சீர்படுத்துகின்றது எனும் தலைப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி அனுசியாசேனாதிராஜா மற்றும் தமிழ் இலக்கிய பேரவைத்தலைவர் க.கிருஸண்மூர்த்தி ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன் ஆகியோர் தமதுவாதங்களை முன்வைத்தனர்.

இன்றைய கலாசாரமே சமூகத்தை சீர்படுத்துகின்றது எனும் தலைப்பில் கவிஞர் ஓய்வுநிலைஅதிபர் பாவணர் அக்கரைப்பாக்கியன் ஓய்வு நிலை விரிவுரையாளர் என்.செல்வநாதன் அதிபர் தேசமனிய ஸ்ரீ மணிவண்ணன் ஆகியோர் வாதாடினர்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்பட்டிமன்றத்தினை பார்வையிட அதிகளவான இலக்கியஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.