ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இரண்டாவது கொரோனா மரணம் சம்பவிப்பு

0
247

ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 28 பேர் உள்ளிட்ட 40 பேருக்கும் இன்று அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

எவரும் தொற்றளார்களாக அடையாளப்படுத்தப்படவில்லை என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் பிரதேசசெயலக உத்தியோகத்தர் ஒருவர் தொற்றுக்குள்ளான நிலையிலும் இன்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், தொற்றாளர்கள் எவரும் அடையாளப்படுத்தப்படாத நிலையில் பிரதேச செயலகத்திலும் தொற்றுநீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பிரதேசசெயலகஉத்தியோகத்தர்கள் மற்றும்
இதேவேளை, ஆலையடிவேம்பில் கொரோனாதொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 02ஆக உயர்வடைந்துள்ளதுடன் 3ஆவது அலையின் பின்னரான முதலாவது மரணம் நேற்று நிகழ்ந்துள்ளது.

உயிரழந்தவர் அக்கரைப்பற்று 08ஆம் பிரிவைச் சேர்;ந்த 70 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மக்கள் பொறுப்புடனும் அவதானத்துடனும் நடந்துகொள்ளுமாறு ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் கேட்டுக்கொண்டார்.