இந்தியாவிலிருந்து பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 20 என்ஜின்கள் இலங்கைக்கு !

0
85

20 ரயில் இன்ஜின்களை இலங்கைக்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், செயலிழந்த சில ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் எஞ்சின்கள் எமது நாட்டிற்கு பொருத்தமான உள்ளதா என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பக் குழுவை எதிர்காலத்தில் இந்தியாவுக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அப்போது அந்த இன்ஜின்களை இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.