இன்று இலங்கை வருகிறது சீன உயர்மட்டக் குழு!

0
75

சீனாவின் சர்வதேச துறை துணை அமைச்சர் சென் சோவ் தலைமையில், சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று இன்று இலங்கை வரவுள்ளது. அவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து கலந்துரையாடலை முன்னெடுப்பார்கள் என சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. சீனா 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இது என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இவர்கள் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.