இலங்கையில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அனைவரும் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் 487 பேர் பூரண குணமடைந்ததை அடுத்து இலங்கையில் 18 ஆயிரத்து 304 பேர் பூரண குணமடைந்தனர்.
அதனடிப்படையில் மேலும் 6,456 பேரே தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.