இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ வரையான வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.