கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் இயக்கச்சி பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாரென்பதுடன் அவரிடமிருந்து 5 கிலோ 660 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.
குறித்த நபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.