இரணைமடு குளத்தில் நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு!

0
105

கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தில் நேற்று நீராடச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில, இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
14 வயதான செல்வரத்தினம் றுசாந்தன் என்ற சிறுவனே நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனும், அவரது சகோதரன் மற்றும் இரு நண்பர்களுமாக நேற்றுக்காலை இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக சென்றுள்ளார்.
இதன்போது நீரில் மூழ்கி காணாமல்போன குறித்த சிறுவனை பொலிஸார், இரணைமடு மீனவர்கள், பிரதேச மக்கள் நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில் நேற்று மீட்க முடியாது போயுள்ளது.

இதையடுத்து இன்று மீண்டும் தேடப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.காணாமல் போன சிறுவன் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்று வருவதுடன், முறிகண்டி வசந்தநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.