இரணை மடுக்குளத்தின் கீழான பெரும் போகபயிர் செய்கை தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

0
59

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர் பாசன குளமான இரணை மடுக்குளத்தின் கீழ் 2024-2025 பெரும் போக பயிர்செய்கை தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் மாவட்ட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இன்று (26-09-2024)நடைபெற்றுள்ளது

குறித்த கூட்டத்தில் இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஆற்றொதுக்கு பிரதேசங்கள் கழிவு வாய்க்கால்கள் வீதிகள் என்பவற்றை தவிர்த்து பயிர் செய்கை மேற்கொள்வது என்றும் குறித்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

மேற்படி கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் நீர்ப்பாசன பொறியியியலார் மற்றும் துறை சார்ந்த திணைக்கள தலைவர்கள் விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்

இதன்போது கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும் விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் சிறுபோக பயிர் செய்கையின் போது தனிப்பட்ட சிலர் நன்மை அடையக்கூடிய வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் குற்றம் சாட்டப்பட்டு மகஜர்களும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது