இரவு நேர தபால் புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்!

0
171

கொரோனா தொற்று நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திருகோணமலை-கொழும்பு இரவு நேர தபால் புகையிரதம் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொரோனா தொற்று நிலைமை காரணமாக இப் புகையிரத சேவை கல்ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
எனவே திருகோணமலையில் இருந்து வரும் பயணிகள் மட்டக்களப்பில் இருந்து வரும் இரவு நேர தபால் ரயிலுக்கு மாற்ற வேண்டியிருந்தது.
பயணிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் புகையிரதத்தை இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.