அம்பாறை மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து எரிபொருளை பெற்றுச் செல்லும் அதேவேளை, குறித்த பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கொள்கலன்களில் எரிபொருள் வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள போதிலும் விவசாயத்திற்கு தேவையான டீசல், பெற்றோல் போன்றவற்றை குறித்த பிரதேசத்தின் கமநல பரிசோதனை உத்தியோகத்தர் அல்லது கிராம உத்தியோகத்தரின்
சான்றிதழுடன் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கல்முனை ,பொத்துவில் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 10 சட்டவிரோத எரிபொருள் விற்பனை நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத எரிபொருள் விற்பனை தொடர்பில் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கேட்டுள்ளனர்.
அத்துடன் பொதுமக்களின் தேவைக்கு போதுமான எரிபொருளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.