இருவருக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் படுகொலை

0
185

இரத்தினபுரி குருவிட்ட பொரலுவ பிரதேசத்தில் வீடொன்றில் இருவருக்கு இடையில் நேற்று (12) இரவு ஏற்பட்ட முறுகலில் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

பொரலு, ஏரத்ன பிரதேசத்தை சேர்ந்த 49 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் தெரணியகல பிரதேசத்தை சேர்ந்த 56 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.