
யாழ்ப்பாண மறை மாவட்டத்திலுள்ள புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரியில், இறையியல் கற்கைநெறியை நிறைவு செய்து டிப்ளோமா சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு, நேற்று யாழ்.மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்லூரி இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களை கௌரவித்து சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளாரும், கௌரவ விருந்தினராக புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரியின் முன்னாள் இயக்குநர் அருட்தந்தை ரவிச்சந்திரன் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.