இலங்கைக்கு கடத்தப்பட இருந்த இஞ்சி இந்தியாவில் பறிமுதல்!

0
12

இந்தியா தமிழ்நாடு இராமநாதபுரம் கடல் வழியாக, இலங்கைக்கு கடத்தப்பட இருந்த இஞ்சி, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை, திருப்புல்லாணி அடுத்து தோப்புவலசை கடற்கரையில் இருந்து, படகு மூலமாக இஞ்சி இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக, இராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாருக்கு, கிடைத்த தகவலை தொடர்ந்து, சேதுகரையில் இருந்து தோப்புவலசை வரையான கடற்கரையில், பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதன் போது, தோப்புவலசை கடற்கரை பகுதியில், 50 இஞ்சி மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.